2ஆவது சீன-இந்திய சிந்தனை கிடங்குகள் கருத்தரங்கு ஜுன் 24ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. பெரும் மாற்றம் கொண்ட தற்போதைய உலகச் சூழ்நிலையில், சீனா மற்றும் இந்தியாவின் சிந்தனை கிடங்குகள் ஆக்கப்பூர்வமான பங்காற்றி, இரு நாட்டுப் பரிமாற்றத்தை வலுப்படுத்தி, பிரதேச மற்றும் சர்வதேச அறைக்கூவல்களைக் கூட்டாகச் சமாளிக்க வேண்டும் என்று இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட சீன மற்றும் இந்திய நிபுணர்கள் தெரிவித்தனர்.