24 மற்றும் 25ஆம் நாள், சீன வெளியுறவு அமைச்சர் வாங்யி ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் முறையே பயணம் மேற்கொண்டார். இப்பயணம் பற்றி 25ஆம் நாள் அவர் செய்தியாளர்களிடம் கருத்துக்களைத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், அழைப்புக்கிணங்க ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் பயணம் மேற்கொண்டேன். இரு நாட்டுறவின் மேம்பாட்டையும் ஆப்கானிஸ்தானின் நல்லிணக்கத்தையும் முன்னேற்றுவிப்பது இப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும். சீனா, பிற நாட்டின் உள்விவகாரத்தில் ஒருபோதும் தலையிடாது. ஆனால், தேவையான போது, நண்பருக்கு உதவிக்கரம் நீட்ட சீனா விரும்புகிறது என்றார்.
பயணத்தின் போது, இரு நாட்டுத் தலைவர்களுடன் வாங்யி விரிவாக உரையாடலை நட்திதனார். இறுதியில் பரந்த பொது கருத்துகள் எட்டப்பட்டு சீன-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
வாங்யி மேலும் கூறுகையில், இப்பயணத்தில் ஆக்கப்பூர்வமான பயன் கிடைத்துள்ளது. பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் ஒன்றுக்கு ஒன்று நல்லெண்ணத்தைக் காட்டியுள்ளன. றிப்பாக, இரு தரப்பின் நெருக்கடி கட்டுப்பாட்டு முறைமையை உருவாக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டன என்றார்.