சிச்சுவான் மாநிலத்தின் மாவ் வட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட 2 நாள்களுக்குப் பின், இது வரை, 10 பேரின் உடல்கள் மீட்கபட்டன. 93 பேரைக் காணவில்லை. மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட உள்ளூரைச் சேர்ந்த சுமார் 300 பேர், அருகில் உள்ள பள்ளிகள் மற்றும் விடுதிகளில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.