கிரிக்கெட்டில் இந்திய அணி புதிய சாதனை
2017-06-26 19:35:38 cri எழுத்தின் அளவு: A A A
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 300 க்கும் அதிகமான ரன்களை எடுத்து புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது. ஜூன் 25 ஆம் நாள் நடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. இப்போட்டியில் தொடக்க வீரர்களான ரஹானே 104 ரன்களும், ஷிகர் தவான் 63 ரன்களும், கேப்டன் கோலி 87 ரன்களும் எடுத்தனர். மொத்தமாக இந்திய அணி 43 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்களை எடுத்து, தன்னை எதிர்த்து ஆடிய மேற்கிந்தியத் தீவு அணியை 105 ரன் வித்தியாசத்தில் வென்றது. இதுவரை ஆஸ்திரேலியா அணி 95 ஒருநாள் போட்டிகளில் 300க்கும் அதிகமான ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்தது. நேற்றைய போட்டியில் 96 ஆவது முறையாக ஒரு நாள் போட்டியில் 300க்கும் அதிகமான ரன்களை எடுத்ததன் வழி அந்தச் சாதனையை முறியடித்து, புதிய சாதனையைப் படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய