அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் முன்வைத்த புதிய குடியேற்றத் தடையின் ஒரு பகுதியை அமெரிக்க உச்ச நிலை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இத்தடை சட்டப்பூர்மாக இருக்குமா என்பதை வரும் அக்டோபரில் அதிகாரப்பூர்வமாக விசாரணை செய்யும் என்று சட்ட கருத்து ஆவணம் ஒன்றில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குடியேற்றத் தடைக்கிணங்க, அமெரிக்காவில் தனிநபர் அல்லது நிறுவனத்துடன் உண்மையாக தொடர்பு கொள்ளும் வெளிநாட்டவர் அமெரிக்காவில் நுழைவதற்குத் தடை விதிக்கக் கூடாது. ஆனால், அமெரிக்காவில் உறவினர், அலுவல் மற்றும் இதர தொடர்பின்றி, இதற்கு முன்பு இந்நாட்டில் பயணம் மேற்கொள்ளாத வெளிநாட்டவருக்கு தற்காலிகமாகத் தடை விதிக்க முடியும் என்று இந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டது.(வான்மதி)