• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியாவின் எல்லை கடந்த செயல் முந்தைய மோதலுடன் வேறுபட்டது
  2017-07-12 18:16:17  cri எழுத்தின் அளவு:  A A A   
இருதரப்பும் பொதுவாக ஏற்றுக்கொண்டுள்ள சிக்கிம் பகுதியின் எல்லையை இந்திய தரப்பு கடந்து சீனாவுக்குள் நுழைந்த செயல், முன்பு இருதரப்புகளின் எல்லை பாதுகாப்பு படைப்பிரிவுகளுக்கிடையே உறுதி செய்யப்பட்டாத எல்லை பகுதியில் நிகழ்ந்த மோதலுடன் சாராம்ச ரீதியாக வேறுபட்டது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் 12ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

1890ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சீன-பிரிட்டன் மாநாட்டின் திபெத்-இந்திய உடன்படிக்கையில், சிக்கிம் பகுதியின் எல்லை அதிகாரப்பூர்வமாக வரையப்பட்டது. இவ்வுடன்படிக்கையை இருநாட்டு அரசுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்நிலையில், இந்திய தரப்பு, எல்லை கடந்த படைப்பிரிவை தனது பக்கத்துக்கு அழைத்து, இப்பிரச்சினையைக் கூடியவிரைவில் தீர்க்க வேண்டும் என்று சீனா கோருவதாக அவர் கூறினார்.(வான்மதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040