பிரிக்ஸ் நாடுகளிலும் புதிதாக வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளிலும் சீனத் தொழில் நிறுவனங்கள் காலடி எடுத்து வைப்பது தொடர்பான கருத்தரங்கு 13ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது. வளர்ச்சிக்கான ஒட்டுமொத்த திட்டத்தைக் கூட்டாக வகுத்து, அருமையான எதிர்காலத்தை உருவாக்குவது என்பது இக்கருத்தரங்கின் தலைப்பாகும். பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதாரக் கூட்டுறவு நெடுநோக்கை செயல்படுத்துவது பற்றியும், மேலும் பரந்த அளவில் கூட்டுறவை உருவாக்குவது குறித்தும் விவாதம் நடத்தப்பட்டது.
பிரிக்ஸ் நாடுகளும் புதிதாக வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளும் வளர்ச்சி வாய்ப்பைப் பெற்று வரும் அதேவேளையில், கட்டுப்பாட்டையும் அறைக்கூவலையும் எதிர்நோக்குகின்றன. வெளிநாடுகளில் சீன தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு இது இடர்ப்பாடுகளையும் சவால்களையும் ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் தொழில் நடத்தும் சீன தொழில் நிறுவனங்கள் வெற்றி பெற முடியுமா என்பது, இந்த வெளிநாடு சீனாவைப் பற்றி அறிந்து கொள்கிறதா, சீனாவை நம்புகிறதா ஆகியவற்றுடன் தொடர்புடையது என்று இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட பிரமுகர்கள் தெரிவித்தனர்.(வான்மதி)