சீன அரசவையின் உறுப்பினர் யாங்சியேச்சு 13ஆம் நாள், பெய்ஜிங் மாநகரில், 72ஆவது ஐ.நா. பொது பேரவையின் தலைவர் மிரோஸ்லாவ் லாஜ்காக்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சர்வதேச விவகாரத்தில் ஐ.நாவின் தகுநிலை மற்றும் பங்குகளில் சீனா மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. 2030ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சி நிகழ்ச்சி நிரல்களை நடைமுறைப்படுத்துவதற்கு சீனா ஆதரவளிக்கிறது. ஐ.நாவின் அமைதி மற்றும் வளர்ச்சி இலட்சியத்திற்கு புதிய பங்காற்ற சீனா விரும்புவதாக யாங்சியேச்சு தெரிவித்தார்.