சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா.வின் 72ஆவது பொதுப் பேரவைத் தலைவர் மிரோஸ்லாவ் லஜ்காக்கை, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ 14ஆம் நாள் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
பலதரப்புக் கோட்பாட்டை ஆதரித்து வரும் சீனா, சர்வதேச விவகாரங்களில் ஐ.நா. மையப் பங்கு ஆற்றுவதை உறுதியாக ஆதரிக்கும். உலக அமைதி மற்றும் வளர்ச்சித் தொடர்பான முக்கிய விவகாரங்களில் ஐ.நா.வின் 72ஆவது பொதுப் பேரவை கவனத்தை குவிக்க வேண்டும் என்றும், சர்வதேச சர்ச்சைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வு காண்பதை முன்னேற்றி, 2030ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சிக்கான நிகழ்ச்சி நிரலின் நடைமுறையாக்கத்தை விரைவுபடுத்தி, காலநிலை மாற்றத்துக்கான பாரிஸ் உடன்படிக்கையின் அமலாக்கத்தை முன்னேற்ற வேண்டும் என்றும் சீனா விரும்புவதாக, வாங் யீ தெரிவித்தார்.