வடகொரியாவும் தென்கொரியாவும், நேர்மறை திசையை நோக்கி செல்லும் வகையில், தேக்க நிலையைக் கடந்து, பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வினை நடத்துவதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும் என்று சீனா விரும்புகிறது.
ராணுவப் பேச்சுவார்த்தை மற்றும் செஞ்சிலுவை கூட்டம் நடத்துவது தொடர்பாக, தென் கொரிய அரசு வடகொரியாவிடம் முன்மொழிவை வழங்கியது என்ற செய்தி குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லு காங் 17ஆம் நாள் வழக்கமான செய்தியாளர் கூட்டத்தில் இதைத் தெரிவித்தார்.
சர்வதேச சமூகத்தில் அனைத்து தொடர்புடைய தரப்புகளும் இதற்கு புரிந்துணர்வையும் ஆதரவையும் அளிப்பதோடு, கொரிய தீபகற்பத்தின் அணு பிரச்சினைக்கு உரிய தீர்வு காண்பதற்கு செயலாற்ற வேண்டும் என்று சீனா விரும்புவதாகவும் லு காங் கூறினார்.