• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
எல்லை பகுதியை இந்தியா கடந்தது பற்றி சீனாவின் கருத்து
  2017-07-19 09:07:50  cri எழுத்தின் அளவு:  A A A   
இரு நாடுகளுக்கிடையிலான எல்லை பகுதியை ராணுவத்தினர் கடந்து செல்வதை, குறிப்பிட்ட இலக்கை எட்டும் கொள்கையின் கருவியாக இந்தியா உருவாக்க வேண்டாம் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லூகாங் 18ஆம் நாள் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், இந்த சம்பவம் மிகவும் தெளிவாக உள்ளது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சிக்கிம் எல்லைப் பகுதி, இரு நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள எல்லை பகுதியாகும். இந்திய படையினர், சட்டவிரோதமாக இரு நாடுகளின் சிக்கிம் எல்லை பகுதியைக் கடந்து, சீனாவின் உரிமைப் பிரதேசத்துக்குள் நுழைந்துள்ளனர் என்பது இந்தச் சம்பவத்தின் உண்மையாகும் என்று கூறினார்.

இந்தியத் தரப்பு, உண்மை நிலைமையைத் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். சட்டவிரோதமாக எல்லையைக் கடந்தவர்கள் வெகுவிரைவில் திரும்ப அழைக்க வேண்டும். தவறான பாதையில் தொடர்ந்து செல்ல வேண்டாம் என்று அவர் தெரிவித்தார்.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040