இந்தியத் தரப்பு 18ஆம் நாள் காஷ்மீர் பகுதியில் போர் நிறுத்த உடன்படிக்கையை மீண்டும் மீறி பாகிஸ்தான் தரப்பினரின் உயிரிழப்பை ஏற்படுத்தியது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் 19ஆம் நாள் பாகிஸ்தானிலுள்ள இந்தியாவின் துணை உயர் நிலை ஆணையாளர் சிங்கிடம் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், இருதரப்பும் 2003ஆம் ஆண்டில் எட்டியுள்ள போர் நிறுத்த உடன்படிக்கையை இந்தியா பின்பற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது.
காஷ்மீரின் உண்மை கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இந்தியப் படை பாகிஸ்தான் தரப்பின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் பாகிஸ்தானின் அப்பாவி மக்கள் இருவர் உயிரிழந்தனர். 6 பேர் காயமுற்றனர். இந்தியாவின் இச்செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.(வான்மதி)