சிரியாவின் இராணுவப் படை 19ஆம் நாள், அந்நாட்டின் தெற்கிலுள்ள அர் ராக் மாநிலத்தில், தீவிரவாத அமைப்பான ஐ.எஸுடன் எதிரான நடவடிக்கையின் மூலம், அதிகமான நிலங்களைத் திரும்பப் பெற்றுள்ளது என்று சிரியா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
சிரியாவின் ஐனநாயக இராணுவப் படை, இம்மாநிலத்திலுள்ள ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு மீது தாக்குதலை நடத்தி வருகிறது. அமெரிக்காவின் தலைமையிலான சர்வதேச கூட்டணியின் உதவியுடன், சிரியாவின் ஐனநாயக படை, அம்மாநிலத்தைச் சுற்றிவளைத்துள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.(சரஸ்வதி)