சீன வெளியுறவு அமைச்சர் வாங்யி சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள கத்தார் வெளியுறவு அமைச்சர் முஹமத் பின் அப்துல்ரஹ்மான் அல்தானியை 20ஆம் நாள் சந்தித்துரையாடினார். சந்திப்பின் போது, வாங்யி கூறுகையில், வளைகுடா ஒத்துழைப்பு மன்ற உறுப்பு நாடுகளுக்கிடையே ஒற்றுமையான பொது கருத்தை உருவாக்க, திறந்த பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வழிமுறையைத் தேட வேண்டும். பல்வேறு தரப்புகளுக்குத் தேவையான போது, சீனா ஆக்கப்பூர்வமான பங்கினை ஆற்ற விரும்புகிறது என்றார் அவர்.
சீனாவின் கருத்தையும் நிலைப்பாட்டையும் முஹமத் வெகுவாகப் பாராட்டினார். பேச்சுவார்த்தை மூலம் நெருக்கடியைத் தீர்க்க கத்தார் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
அண்மையில், கத்தாருடன் தூதாண்மையுறவு துண்டிப்பு சம்பவத்தால், மத்திய கிழக்குப் பகுதியில் தூதாண்மை நெருக்கடி ஏற்பட்டுள்ளது.