ஐ.நா பாதுகாப்பவை, 15 வாக்குகளின் ஆதரவுடன், இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. மேற்கூறிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய தனிநபர்கள், குழுக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள், தடை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் பெயர்ப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. சொத்து முடக்கம், சுற்றுலா தடை, ஆயுதங்களை ஏற்றிச்செல்வதற்கான தடை முதலியவை, அவற்றின் மீதான தடை நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ளன. பல்வேறு நாடுகள் ஒன்றுபட்டு, பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதலை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று இந்த தீர்மானம் வேண்டுகோள் விடுத்தது.(ஜெயா)