• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐ.எஸ் மற்றும் அல்கய்தா அமைப்புகளின் மீதான தடை நடவடிக்கை பற்றி ஐ.நாவின் தீர்மானம்
  2017-07-21 09:19:25  cri எழுத்தின் அளவு:  A A A   
ஐ.எஸ் மற்றும் அல்கய்தா அமைப்புகளின் மீதான தடை நடவடிக்கை பற்றிய மறு பரிசீலனைத் தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்பவை 20ஆம் நாள் ஏற்றுக்கொண்டது. இதன் மூலம், பயங்கரவாத அமைப்புகள் மீதும், அவற்றின் செயல்கள் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்படுத்தும் அச்சுறுத்தல் மீதும் தாக்குதல் நடத்தப்படும்.

ஐ.நா பாதுகாப்பவை, 15 வாக்குகளின் ஆதரவுடன், இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. மேற்கூறிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய தனிநபர்கள், குழுக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள், தடை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் பெயர்ப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. சொத்து முடக்கம், சுற்றுலா தடை, ஆயுதங்களை ஏற்றிச்செல்வதற்கான தடை முதலியவை, அவற்றின் மீதான தடை நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ளன. பல்வேறு நாடுகள் ஒன்றுபட்டு, பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதலை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று இந்த தீர்மானம் வேண்டுகோள் விடுத்தது.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040