• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஈரான்:அணு ஆற்றல் உடன்படிக்கை பற்றி பேச்சுவார்த்தை மீண்டும் நடத்தாது
  2017-07-21 09:21:49  cri எழுத்தின் அளவு:  A A A   
ஈரான் அணு ஆற்றல் பிரச்சினைக்கான பன்முக உடன்படிக்கை பற்றி பேச்சுவார்த்தை மீண்டும் நடத்தப்பட வாய்ப்பில்லை என்று நியூயார்கில் ஐ.நாவின் தொடர்புடைய நிகழ்ச்சியில் பங்கேற்ற ஈரான் வெளியுறவு அமைச்சர் முஹமத் சாவத் சாரிஃப் 19ஆம் நாள் தெரிவித்தார். ஈரான் செய்தி ஊடகம் 20ஆம் நாள் இத்தகவலை வெளியிட்டது.

13ஆம் நாள் சாரிஃப் தலைமையிலான ஈரான் குழு நியூயார்கைச் சென்றடைந்தது. இப்பயணத்தின் போது, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரேக்ஸ் டில்லர்சனுடன் பேச்சுவார்த்தை நடத்துமா இல்லையா என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில் சாரிஃப் மறுப்பு தெரிவித்தார். ஈரான் அணு ஆற்றல் பிரச்சினைக்கான பன்முக உடன்படிக்கையின் நடைமுறையாக்கத்துக்கு உறுதுணையாக இருக்கும் முன்நிபந்தனையில் தான், அமெரிக்க வெளியுறவு அமைச்சரைச் சந்திக்க வாய்ப்புள்ளது என்று சாரிஃப் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040