2017ஆம் ஆண்டுக்கான சீன-ரஷிய கூட்டு கடல் ராணுவப் பயிற்சி, 22ஆம் நாள் காலை, ரஷியாவின் பல்டிஸ்க் துறைமுகத்தில் துவங்கியது. இதில் சீனக் கடற்படையின் துணை முதன்மை தலைவர் டியன் ஜூங் துவக்க உரை நிகழ்த்தினார்.
சீன-ரஷிய கூட்டுக் கடல் ராணுவப் பயிற்சி, இரு நாட்டுப் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவை முன்னேற்றும் முக்கிய நடவடிக்கையாகும். அதோடு, இரு நாட்டு ராணுவ படைகளின் குறிப்பாக கடற்படைகளின் பரிமாற்றத்தை வலுப்படுத்தும் முக்கிய செயலாகும். உலக அமைதியையும் பிரதேச நிதானத்தையும் இரு நாடுகளும் கூட்டாக பேணிக்காப்பதற்கு இந்த ராணுவப் பயிற்சி துணை புரியும் என்று டியன் ஜுன் தெரிவித்தார்.
(கலைமணி)