ரஷியா, ஈரான், வட கொரியா ஆகிய மூன்று நாடுகள் மீது தடை நடவடிக்கை மேற்கொள்வதற்கான கருத்துரு ஒன்றை ஏற்றுக்கொள்வதை அமெரிக்க செனெட் அவையும், பிரதிநிதிகள் அவையும் கூட்டாக முன்னேற்றும். இந்த கருத்துரு ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஜூலை திங்கள் இறுதிக்குள் அமெரிக்க அரசுத் தலைவர் டோனல்ட் டிரம்பிடம் ஒப்படைக்கப்படும் என்று அமெரிக்க நாடாளுமன்றம் 22ஆம் நாள் தெரிவித்தது.
மேற்கூறிய மூன்று நாடுகள் மீதான தடை நடவடிக்கையைத் தவிர, ரஷியா மீது தடையை அகற்றும் அரசுத் தலைவரின் அதிகாரத்தை இக்கருத்துரு கட்டுப்படுத்தியுள்ளது. இதன்படி, ரஷியா தொடர்பான தூதாண்மை கொள்கையில் பெரும் மாற்றத்துக்கு வழிகாட்டும் நடவடிக்கையை அரசுத் தலைவர் மேற்கொள்ளும் போது, நாடாளுமன்றத்திடம் அறிக்கையை ஒப்படைக்க வேண்டும். அரசுத் தலைவரின் தீர்மானத்தை நிராகரிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உண்டு என்னும் விதி இக்கருத்துருவில் சேர்க்கப்பட்டுள்ளது.
திட்டப்படி, பிரதிநிதிகள் அவை 25ஆம் நாள் இக்கருத்துரு பற்றி வாக்கெடுப்பு நடத்தும். இது ஏற்றுக்கொள்ளப்பட்ட பின், வாக்கெடுப்புக்கு செனெட் அவையிடம் ஒப்படைக்கப்படும். (மீனா)