வங்காளதேசத்தில் அதிகரித்து வரும் எரியாற்றல் தேவையை நிறைவு செய்யும் வகையில், அடுத்த நான்கு ஆண்டுகளில், அந்நாட்டில் 22 நிலக்கரி மின்சார நிலையங்களை கட்டியமைக்கத் திட்டமிட்டுள்ளதாக வங்காளதேச மின்சார எரியாற்றல் மற்றும் தாது மூலவள அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஹாமித் 21ஆம் நாள் தெரிவித்தார்.
22 நிலக்கரி மின்சார நிலையங்களில், 7 நிலையங்கள் அரசால் கட்டியமைக்கப்படும். 7 நிலையங்கள் தனியார் நிறுவனங்களால் கட்டியமைக்கப்படும். இதர 8 நிலையங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களால் கூட்டாக கட்டியமைக்கப்படும் என்றும், 2019ஆம் ஆண்டு கட்டுமானப் பணி துவங்க வேண்டும் என அரசு விரும்புவதாகவும் ஹாமித் தெரிவித்தார்.
இதர எரியாற்றல் வடிவங்களை விட, நிலக்கரி மின்சார நிலையங்களின் செலவு குறைவு. 2021ஆம் ஆண்டு வரை, வங்காளதேசம் 24 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி ஆற்றலைக் கொள்ளும். 2030ஆம் ஆண்டு வரை, அந்நாட்டிற்கான 30 விழுக்காட்டு மின்சார ஆற்றலை, நிலக்கரி மின்சார நிலையங்கள் மூலம் வழங்க வேண்டும் என அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். (மீனா)