• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
காஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் இடையே துப்பாக்கிச் சண்டை
  2017-07-23 16:18:29  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 21ஆம் நாளிரவு காஷ்மீரிலுள்ள கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய படைவீரர் ஒருவர் உயிரிழந்தார். வேறு ஒருவர் காயமுற்றார் என்று இந்திய இராணுவம் 22ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

பாகிஸ்தான் படைவீரர்கள் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி, இந்திய காவல் சாவடி மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர் என்றும், இதன் விளைவாக இந்திய தரப்பு எதிர் தாக்குதல் தொடுத்தது என்றும் இவ்வறிக்கையில் கூறப்பட்டது.

இது குறித்து பாகிஸ்தான் தரப்பு இதுவரை பதிலளிக்கவில்லை. (வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040