கடையில் தேநீர் அருந்திய பிறகு, வாடிக்கையாளர்கள் வாந்தி எடுக்க ஆரம்பித்தனர். பின்னர், அவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் விரைவாக சேர்க்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சிகிச்சைக்காக, அவர்களை வாராணசியில் உள்ள மருத்துவமையத்துக்குக் கொண்டு செல்ல பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
தேநீரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இச்சம்பவத்துக்குப் பிறகு, தப்பியோடிய கடையின் முதலாளியைப் பிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.