பாலஸ்தீன-இஸ்ரேல் நிலைமை பற்றி அரபு நாடுகள் லீக்கின் கூட்டம்
2017-07-24 11:31:27 cri எழுத்தின் அளவு: A A A
பாலஸ்தீன-இஸ்ரேல் நிலைமையை விவாதிக்க அமைச்சர் நிலையிலான அவசர கூட்டம் நடத்தும் என்று அரபு நாடுகள் லீக் 23ஆம் நாள் அறிவித்தது. 26ஆம் நாள் நடைபெறும் இக்கூட்டத்தில் ஜெருசலேமில் நிகழ்ந்த மோதல் பற்றியும், இஸ்ரேல் அரசின் சமாளிப்பு நடவடிக்கைகள் பற்றியும் விவாதிக்கப்படவுள்ளன.
14ஆம் நாள் ஜெருசலேமிலுள்ள டெம்பல் மாங்ட் பிரதேசத்தில் 3 இஸ்ரேல் காவற்துறையினர் துப்பாக்கியால் தாக்கப்பட்ட பிறகு, இப்பிரதேசத்தில் இஸ்ரேல் முற்றுகையிட்டிருந்தது. இது மீண்டும் திறக்கப்பட்ட பிறகு, இக்கோயிலின் நுழைவாயிலில் இஸ்ரேல் மிக கண்டிப்பான பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள துவங்கியது. இது முஸ்லீம் மக்களின் கடும் மனநிறைவின்மையை ஏற்படுத்தியதால், மோதல் நிகழ்ந்தது. (வாணி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய