24ஆம் நாள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு குறித்து, ஐ.நா தலைமை செயலர் குட்ரேஸ் அவருடைய செய்திதொடர்பாளரின் மூலம் அறிக்கையை வெளியிட்டு கடுமையான கண்டனம் தெரிவித்தார்.
உயிரிழத்தோரின் குடும்பத்தினர்களுக்கு குட்ரேஸ் ஆழமான அனுதாபம் தெரிவித்தார். காயமுற்றவர்கள் வெகுவிரைவில் குணமடைய வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் அரசுடனும் மக்களுடனும் ஐ.நா. எப்போதுமே இணைந்து இருக்கும் என்று இவ்வறிக்கையில் குட்ரேஸ் தெரிவித்தார்.
(கலைமணி)