பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிய பிறகு, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகியவற்றுடன் தாராள வர்த்தக உடன்படிக்கை பற்றிய கலந்தாய்வினை நடத்தும் என்று பிரிட்டனின் சர்வதேச வர்த்தக அமைச்சர் லியம் ஃபோக்ஸ் தெரிவித்துள்ளார்.
24ஆம் நாள் அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க தொழில் நிறுவன ஆய்வகத்தில் உரை நிகழ்த்திய போது அவர் இதைத் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிய பிறகு, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் பன்முக வர்த்தக உறவை உருவாக்க பிரிட்டன் பாடுபடும் என்று அவர் தெரிவித்தார்.
அதோடு, பிரிட்டனும், அமெரிக்காவும் வர்த்தக மற்றும் முதலீட்டு பணி குழுவை உருவாக்கியுள்ளன. இவ்விரு நாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு இப்பணி குழு நம்பிக்கையை அதிகரிக்கும் அதே வேளையில், இரு நாடுகளும் பன்முக தாராள வர்த்தக உடன்படிக்கையை உருவாக்குவதற்கு அடிப்படையிடும் என்று ஃபோக்ஸ் தெரிவித்தார். (மீனா)