வேலைவாய்ப்பின்மை பிரச்சினையைப் புறக்கணிக்கும் வகையில் இந்தியாவில் ஓட்டுநரில்லா வாகனங்களை அனுமதிக்க மாட்டோம் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான இந்திய மத்திய அமைச்சர் நிதின் காட்காரி தெரிவித்தார்.
திங்கள்கிழமை செய்தியாளரிடம் கூறுகையில், ஓட்டுநர் திறன் பயிற்சி அளிப்பதில் அரசு ஈடுபடும். இதன் மூலம் சுமார் 5 இலட்சம் ஓட்டுநர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
அனைத்து பொது மற்றும் தனியார் வாகனங்களிலும் ஜிபிஎஸ் மற்றும் செயற்கைகோள் கண்காணிப்பு வசதியை பொருத்த அரசு திட்டமிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். (வாணி)