24ஆம் நாள் மாலை, பாகிஸ்தான் கிழக்கு பகுதியிலுள்ள பஞ்சாப் மாநிலத்தின் தலைநகர் லாஹுரில் தற்கொலைப்படை குண்டு வெடிப்பு ஒன்று நிகழ்ந்தது. இதில் 9 காவற்துறையினர்களை உள்ளிட்ட 26 பேர் உயிரிழந்தனர். 49 பேர் காயமுற்றனர்.
உயிரிழ்ந்தோரின் குடும்பங்களுக்கு 18 ஆயிரத்து 980 அமெரிக்க டாலரும் கடுமையாக கயமுற்றவர்களுக்கு சுமார் 9500 அமெரிக்க டாலர்களும், லேசாக காயமுற்றவர்களுக்கு சுமார் 2800 அமெரிக்க டாலர்களும் உதவி தொகையாக அளிக்கப்படும் என்று 25ஆம் நாள் பஞ்சாப் மாநில அரசு தெரிவித்தது.
பாகிஸ்தான் தாலிபனின் கிளை அமைப்பு ஒன்று இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
(கலைமணி)