ரஷியா, ஈரான், வட கொரியா ஆகிய மூன்று நாடுகள் மீது தடை நடவடிக்கை மேற்கொள்வதற்கான கருத்துரு ஒன்றை அமெரிக்க செனெட் அவை 27ஆம் நாள் வாகெடுப்பு மூலம் ஏற்றுக்கொண்டது. தொடர்புடைய சட்டமியற்றல் விதியின்படி, கையொப்பமிட அல்லது நிராகரிக்க இக்கருத்துரு அமெரிக்க அரசுத் தலைர் டொனல்ட் டிரம்பிடம் ஒப்படைக்கப்படும்.
இக்கருத்துருவின்படி, 2016ஆம் ஆண்டு அமெரிக்க அரசுத் தலைவர் தேர்தலில் ரஷியாவின் தலையீடு, உக்ரைன் நெருக்கடி ஆகியவற்றின் காரணமாக ரஷியாவின் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் மீதான பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை அமெரிக்கா அதிகரிக்கும். தவிர, எறிவிசை ஏவுகணையின் வளர்ச்சியைத் தடுப்பதன் காரணமாக, ஈரான் மற்றும் வட கொரியா மீது புதிய தடை நடவடிக்கையை மேற்கொள்ளும்.
மேற்கூறிய மூன்று நாடுகள் மீது தடை நடவடிக்கையை மேற்கொள்வதை வெள்ளை மாளிகை ஆதரிப்பதாக வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் சாரா சன்டேர்ஸ் தெரிவித்திருந்தார். (மீனா)