மக்கள் படையை உலக முதல் தர படையாக்க கட்டியமைக்க வேண்டும் என்று ஜுலை 30ஆம் நாள் முற்பகல், சீன மக்கள் விடுதலை படை நிறுவப்பட்ட 90ஆம் ஆண்டு நினைவை முன்னிட்ட நடைபெற்ற ராணுவ அணி வகுப்பில், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பீங், உத்தரவை பிறப்பித்தார்.
இந்த முறை, 600க்கும் மேலான படை சாதனங்களில் பாதியளவு, முதல்முறையாக காட்டப்பட்டுள்ளன. தற்போது, சீன மக்கள் விடுதலை படை ஒரு வகையிலான படைப் பிரிவிலிருந்து பல வகையிலான படைப் பிரிவுகளுடன் இணைந்து, நவீனமயமாக்க நிலையான படையாக மாறியுள்ளது. அதோடு, தகவல் மயமாக்கத்தில் நுழையும் வலிமை மிக்க படையாகவும் விரைவாக மாற உள்ளது.(ஜெயா)