ஜுலை 31ஆம் நாளிரவு, இந்தியாவிலுள்ள சீனத் தூதரகம், தாஜ் மாளிகை விடுதியில், விருந்து ஒன்றை நடத்தி, சீன மக்கள் விடுதலை படை உருவாக்கப்பட்ட 90ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. சீன தூதர் லொ சாவ் ஹுயின் தலைமையில், சீனாவின் அனைத்து தூதாண்மை அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர். இந்திய விமானப் படையின் துணைத் தலைவர் பிரபாகரன், இந்தியாவின் பிரதிநிதியாக இதில் கலந்துகொண்டார். இந்தியாவின் அரசு, ராணுவப் படை, நாடாளுமன்றம், கட்சிகள் ஆகியவற்றின் 300க்கும் மேலான பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(கலைமணி)