• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சுகாதார பிரச்னைகளில் ஒத்துழைப்பு மேற்கொள்ளும் தெற்காசிய நாடுகள்
  2017-08-01 14:45:08  cri எழுத்தின் அளவு:  A A A   

தெற்காசிய நாடுகளில் சுகாதாரப் பிரச்னைகளைக் கையாளும் பொருட்டு முன்னேறிய ஒத்துழைப்பை மேற்கொள்ள வேண்டும் என்று தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இலங்கையில் செவ்வாய்க்கிழமை முதல் சனிக்கிழமை நடைபெற்று வரும் சார்க் கூட்டத்தில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதில், "கொழும்புவின் உறுதி மொழி : பிராந்திய சுகாதார பிரச்னைகளுக்கான முன்னேற்றத்தை விரைவுப்படுத்துவதற்கான அழைப்பு" என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டதாக வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உறுதிமொழியில், பரவும் மற்றும் பரவாத நோய், ஊட்டச்சத்து, சுகாதாரம், பாரம்பரிய மருத்துவம், உடல் ஆரோக்கியத்துக்கான மனித வளம் உள்ளிட்ட பிரிவுகளில் ஒத்துழைப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040