இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுக மேம்பாட்டுக்காக இலங்கையும், சீனாவும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது, அந்நாட்டின் அன்னிய செலாவணியை, அதிகரிக்கும் என்று மதிப்பீடு நிறுவனமான மூடி திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிக்கவும் இது உதவும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
துறைமுகத்தைச் சுற்றி நடைபெறும் பிற கட்டுமானப்பணிகள், பெரிய அளிவிலான தனியார் முதலீடுகள் இலங்கைக்கு வர உதவும். இத்துடன், பிற வளர்ச்சித் திட்டங்கள் இலங்கையின் நிலையான நிதிமூலத்துக்கு ஆதரமாக இருப்பதுடன், பொருளாதார வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் என்று மூடி தெரிவித்துள்ளது.