மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாநிலத்தில் அமைந்துள்ள மசூதி ஒன்றின் மீது, ஆக்ஸ்ட் முதல் நாள் இரவு 8:30 அளவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் குறைந்தது 29 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் ஷியட் பரிவு முஸ்லிம்களாவர். மேலும், 64 பேர் காயமடைந்தனர் என்று இம்மாநிலத்தின் அதிகாரி ஒருவர் அதே நாள் உறுதிப்படுத்தினார்.
விசாரணையின்படி, குறைந்தது 2 தீவிரவாதிகள் இதில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இத்தாக்குதலுக்கு இது வரை, எந்த அமைப்போ, தனிநபரோ பொறுப்பேற்கவில்லை.