இலங்கையில் அதிகமான சீன முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வேண்டும் என்று இலங்கை திங்கழ்கிழமை கேட்டுக் கொண்டது. 2016ஆம் ஆண்டு மட்டும் இலங்கையில் சீன முதலீட்டாளர்கள் 5.2 கோடி அமெரிக்க டாலர் முதலீடு செய்துள்ளனர்.
கொழும்புவில் நடைபெற்ற சீன-இலங்கை கட்டமைப்பு முதலீடு ஒத்துழைப்பு மன்றத்தில் அந்நாட்டு வரத்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் ரிஷார்ட் பதிதீன் கூறுகையில், கடந்த ஆண்டு இலங்கை ஈர்த்துள்ள அன்னிய நேரடி முதலீட்டுத் தொகை 80.10 கோடி அமெரிக்க டாலாராகும். சமீபத்தில் சீன இலங்கை இடையே கையெழுத்தான அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம், கொழும்பு நிதி நகர் உள்ளிட்ட திட்டங்கள் இலங்கையின் வளர்ச்சிக்கு துணைபுரியும் என்று தெரிவித்தார்.
மேலும், இலங்கையில் பயணம் மேற்கொள்ளும் சீன பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு இரட்டிப்பாகி வருகிறது. அதனால், சீன முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு அழைப்பு விடுக்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.