கடல் மட்டத்திலிருந்து உயர்ந்த, குளிர்ச்சியான உறைந்த மண் பிரதேசத்தில் செல்லும் உலகின் முதலாவது உயர் வேக நெடுஞ்சாலை ஆகஸ்ட் முதல் நாள் போக்குவரத்துக்கு அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 7 ஆண்டுகளாக கட்டியமைக்கப்பட்ட இந்நெடுஞ்சாலை, சிங்காய் மாநிலத்தின் குன் ஹே மாவட்டத்திலிருந்து யு சு தன்னாட்சி சோவை இணைக்கிறது.
இந்நெடுஞ்சாலை உறை மண் பிரதேசத்தைக் கடக்கிறது. இது பல ஆண்டுகளாக உருவாகிய உறை மண் பிரதேசத்தைக் கடக்கும் மொத்த நீளம், 227 கிலோமீட்டர் ஆகும். இது, இந்நெடுஞ்சாலையின் முழு நீளத்தில் 36 விழுக்காடு ஆகும். பல ஆண்டுகளாக உருவாகிய உறை மண் பிரதேசத்தில் நெடுஞ்சாலை கட்டுமானத்தை நிறைவேற்றும் தொழில் நுட்பம், உலக அளவில் முன்கண்டிராதது என்பது குறிப்பிடத்தக்கது. (மீனா)