இந்த ஆவணம் மூலம், இச்சம்பவத்தின் உண்மை நிலைமையையும் சீனாவின் நிலைப்பாட்டையும் சர்வதேச சமூகத்துக்குச் சீனா விளக்கிக் கூறியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கேங்ஷுவாங் இது பற்றி கூறுகையில், சீனாவின் இச்செயல், நாட்டு உரிமைப் பிரதேசத்தின் இறையாண்மையையும், சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச உறவின் அடிப்படை கோட்பாட்டையும் பேணிக்காப்பதற்கானது. அதோடு, நியாயம் மற்றும் நீதிக்கானதுமாகும் என்று தெரிவித்தார்.