சீன வெளியுறவு அமைச்சகத்தின் நிலைப்பாட்டு ஆவணம்
2017-08-02 18:15:20 cri எழுத்தின் அளவு: A A A
இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை, சீன-இந்திய எல்லையிலுள்ள சிக்கிம் பகுதியைக் கடந்து சீன உரிமைப் பிரதேசத்துக்குள் நுழைந்த உண்மை மற்றும் சீனாவின் நிலைப்பாடு என்ற ஆவணத்தைச் சீன வெளியுறவு அமைச்சகம் 2ஆம் நாள் வெளியிட்டது. 1890ஆம் ஆண்டு உடன்படிக்கையையும் இதில் உறுதி செய்யபட்ட சீன-இந்திய எல்லையையும் இந்திய அரசு கடைபிடிக்க வேண்டும் என்றும், சீனாவின் இறையாண்மைக்கு மதிப்பளித்து, எல்லையைக் கடந்து சென்ற படை வீரர்களை வெளியேற்ற வேண்டும் என்றும், இரு நாட்டு எல்லை பகுதியின் அமைதியை மீட்கும் வகையில், இந்தச் சம்பவத்தை உரிய முறையில் கையாள வேண்டும் என்றும் இவ்வாவணத்தில் கூறப்பட்டது. (வாணி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய