• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆப்கானிஸ்தானில் தாக்குதல் சம்பவம்
  2017-08-03 09:34:56  cri எழுத்தின் அளவு:  A A A   
அமெரிக்க இராணுவப் படையினர் இருவர், 2ஆம் நாள் தெற்கு ஆப்கானிஸ்தானில்  தங்களது கடமையை நடைமுறைப்படுத்திய போது தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்தனர். அமெரிக்கத் தரப்பு இச்சம்பவம் தொடர்பாக கள ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது என்று அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் அதே நாள் தெரிவித்தது.
ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்கா தலைமையிலான நேட்டோவின் பன்னாட்டு பாதுகாப்பு உதவிப் படை 2014ஆம் ஆண்டின் இறுதிக்குள் அந்நாட்டில் தங்களது போர்க் கடமையை முடித்துக்கொண்டது. தற்போது, ஆப்கானிஸ்தானின் படைக்கு பயிற்சி அளித்தல், தொழில் நுட்ப ஆதரவு முதலிய முக்கிய கடமையை ஆப்கானிஸ்தானில் மேற்கொண்டு வருகிறது. தற்போது வரை, சுமார் 8400 அமெரிக்க இராணுவப் படையினர்கள் உள்ளனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040