• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ரஷியா, ஈரான் மற்றும் வட கொரியாவின் தடை பற்றிய கருத்துருவில் டிரம்ப் கையொப்பமிட்டார்
  2017-08-03 10:48:35  cri எழுத்தின் அளவு:  A A A   

ரஷியா, ஈரான், வட கொரியா ஆகிய மூன்று நாடுகள் மீது தடை நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பான கருத்துருவில் அமெரிக்க அரசுத் தலைவர் டோனல்ட் டிரம்ப் 2ஆம் நாள் கையொப்பமிட்டார். இதன் மூலம், இக்கருத்துவு அதிகாரப்பூர்வமான சட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

கண்டிப்பான வழிமுறை மூலம் ஈரான் மற்றும் வட கொரியாவைத் தண்டிப்பதை ஆதரிப்பதோடு, அமெரிக்காவின் உள் விவகாரங்களில் தலையிடுவதைச் சகித்துக் கொள்ளப் போவதில்லை என்றும் டிரம்ப் அன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இருந்த போதிலும், இக்கருத்துருவில் "கடும் குறைபாடு" நிலவுகின்றது. வெளிநாடுகளுடனான பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் நிர்வாக வாரியங்களின் அதிகாரத்தைச் சீர்குலைத்து, அமெரிக்காவுக்கு நலன்களை நாடுவதில் அரசுத் தலைவரின் வளைந்து கொடுக்கும் ஆற்றலை இது குறைத்துள்ளது என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

அதோடு, அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்த ரஷியா நடவடிக்கை மேற்கொள்வதையும், உலகின் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில், அமெரிக்காவும் ரஷியாவும் ஒத்துழைப்பு மேற்கொள்வதையும் அமெரிக்கா எதிர்பார்ப்பதாக டிரம்ப் தெரிவித்தார். (மீனா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040