ஆசியானின் நடப்பு தலைவர் பதவி வகிக்கும் நாடான பிலிப்பைனின் வெளியுறவு அமைச்சர் கயடானோவின் அழைப்பை ஏற்று, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஆகஸ்ட் 6 முதல் 8ஆம் நாள் வரை பிலிப்பைன் மணிலாவில் நடைபெறவுள்ள சீன-ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம், ஆசியான், சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரிய வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம், EAS எனும் கிழக்காசிய உச்சி மாநாட்டின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம், ARF எனும் ஆசியான் பிரதேச மன்றத்தின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் உள்ளிட்ட கூட்டங்களிலும், ஆசியான் நிறுவப்பட்டதன் 50ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்திலும் கலந்து கொள்வார். சீன வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் கெங் சுவாங் 3ஆம் நாள் இதைத் தெரிவித்தார். (மீனா)