சர்வதேச சமூகம், பயங்கரவாத எதிர்ப்பு வரையறையை ஒருமைப்படுத்திப் பன்முகங்களிலும் பயனுள்ள நடவடிக்கைகளைக் கூட்டாக மேற்கொள்ள வேண்டும். பயங்கரவாத அமைப்பு ஆயுதங்களைப் பெறும் வழிமுறையைத் துண்டிக்க வேண்டும் என்று ஐ.நாவுக்கான சீன நிரந்தர பிரதிநிதி லியூ ஜெயி 2ஆம் நாள் வேண்டுகோள் விடுத்தார். அன்று நடத்திய பயங்கரவாத அமைப்புகள் ஆயுதம் பெறுவதை தடுப்புத் தொடர்பான ஐ.நாவின் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கூட்டத்தில் தீர்மானம் ஒன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்புக்கான ஆயுத வழங்கலைத் துண்டிக்க பல்வேறு நாடுகள் ஒன்றிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இத்தீர்மானம் வேண்டிக்கொண்டுள்ளது.