• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நாடளவில் 100க்கும் அதிகமான பாலங்கள் சீர்குலையும் அபாயத்தில் உள்ளன:இந்திய அரசு
  2017-08-03 18:23:53  cri எழுத்தின் அளவு:  A A A   
நாடளவில் 100க்கும் அதிகமான பாலங்கள் பாழடைந்த நிலையிலும் சீர்குலைவதற்கான அபாயத்திலும் உள்ளன என்று இந்திய அரசு 3ஆம் நாள் தெரிவித்தது.
நாடாளுமன்றத்தில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கதகாலி கூறுகையில், நாடு முழுவதிலும் உள்ள ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பாலங்களின் பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்துள்ளதாகவும், அவற்றில் 100க்கும் அதிகமான பாலங்கள் எப்போது வேண்டுமானாலும் சீர்குலையலாம் என்று கண்டறிந்துள்ளதாகவும் இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.
இந்தியாவில் பாலம் சீர்குலையும் சம்பவங்கள் அதிகமாக ஏற்படுகின்றன.
மே திங்களில் மேற்கு இந்திய மாநிலமான கோவாவில் ஒரு நதி மீது கட்டப்பட்டிருந்த நடைபாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட், மும்பையையும் கோவாவையும் இணைக்கும் ஒரு பாலம் இடிந்ததில், 2 பேருந்துகளும் ஒரு சீருந்தும் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாயின. இதில் 38 பேர் உயிரிழந்தனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040