• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியாவின் பதிலுக்குச் சீனாவின் கருத்து
  2017-08-03 20:22:08  cri எழுத்தின் அளவு:  A A A   

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை, சீன-இந்திய எல்லையிலுள்ள சிக்கிம் பகுதியைக் கடந்து சீன உரிமைப் பிரதேசத்துக்குள் நுழைந்தது தொடர்பாக சீனா 2ஆம் நாள் நிலைப்பாட்டு ஆவணம் ஒன்றை வெளியிட்டது. இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவிக்கையில் அமைதி மற்றும் நிதானம் இரு நாட்டுறவு சுமூகமாக வளர்வதற்கான முக்கிய முன்னிபந்தனையாகும் என்று குறிப்பிட்டுள்ளது.

இது பற்றி சீனாவின் கருத்து என்ன என்ற கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கெங்சுவாங் 3ஆம் நாள் பெய்ஜிங்கில் பதிலளித்தார்.

அமைதிக்காக செயல்பட வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது. ஆனால், கூற்றை விட அதன் செயல்பாட்டில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என்று சீனா கருதுவதாக அவர் கூறினார். இச்சம்பவம் நிகழ்ந்து ஒரு திங்களுக்கும் மேலாகி விட்டது. ஆனால், இந்திய படை வீரர்கள் இன்னும் சட்டவிரோதமாக சீனாவின் உரிமை பிரதேசத்தில் தங்கி இருக்கின்றனர். மேலும், இப்பகுதியில் இந்திய படைவீரர்கள் பலர் குவிக்கப்பட்டுள்ளனர். இது அமைதி இலக்கிற்காக மேற்கொள்ளப்படும் செயல் அல்ல.

பாதுகாப்புப் பிரச்சினை, மூன்று நாடுகளின் எல்லைப் பிரச்சினை, பூடானின் கோரிக்கை ஆகியவற்றை இந்தியா சாக்குப்போக்காகப் பயன்படுத்தி வருகின்றது. இதுவும் அமைதி இலக்கிற்காக மேற்கொள்ளப்படும் செயல் அல்ல.

சீனாவின் தூதாண்மை முயற்சிகளை இந்தியா பொருட்படுத்தவில்லை. அதோடு, பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நல்லெண்ணத்தையும் காட்டவில்லை என்று சீனா கருதுவதாக கெங்சுவாங் தெரிவித்தார். அமைதியை உண்மையாகப் பேணிக்காத்து, தொடர்புடைய படைவீரர்களை உடனடியாக இந்தியாவின் உரிமை பிரதேசத்துக்கு அழைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். (வாணி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040