• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இஸ்ரேலின் மீதான பாலஸ்தீனத்தின் கண்டனம்
  2017-08-04 15:01:06  cri எழுத்தின் அளவு:  A A A   

3ஆம் நாள், ஜோர்டன் ஆற்றின் மேற்குக் கரையில் யூதர் குடியிருப்பை புதிதாக கட்டியமைப்பதற்கான திட்டப்பணியின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், இஸ்ரேல் தலைமையமைச்சர் பெஞ்சமின் நெதன்யாகு கலந்துகொண்டார். பாலஸ்தீனம் இத்திட்டப்பணிக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நடவடிக்கை இரு நாடுகளின் திட்டத்தை சீர்குலைத்துள்ளதாக பாலஸ்தீன அரசுத் தலைவர் மாளிகை 3ஆம் நாள் வெளியிட்ட செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளது.

கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட ஜோர்டன் ஆற்றின் மேற்குக் கரைப் பகுதியும் காசா பிரதேசமும், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த உரிமை பிரதேசமாகும். இப்பிரதேசங்களில், யூதர் குடியிருப்பு இடங்களை உருவாக்கும் நடவடிக்கை சட்டத்தை மீறியது என்று பாலஸ்தீன அரசுத் தலைவர் மாளிகையின் செய்திதொடர்பாளர் நபில் அபு நிரைனா  இச்செய்தியறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
(கலைமணி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040