காலநிலை மாற்றத்துக்கான கட்டுகோப்பு பொது ஒப்பந்தத்துடன் தொடர்புடைய சுமார் 200 தரப்புகள், 2015ஆம் ஆண்டின் டிசம்பர் திங்கள் பாரிஸில் நடைபெற்ற காலநிலை மாற்ற மாநாட்டில், பாரிஸ் ஒப்பந்தத்தைக் கூட்டாக ஏற்றுக்கொண்டு, 2020ஆம் ஆண்டுக்குப்பிறகு காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் நடவடிக்கைக்கு ஆயத்தம் செய்தன. ஆனால், பாரிஸ் ஒப்பந்தம், அமெரிக்காவின் நலன்களுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்று அமெரிக்க அரசுத் தலைவர் பதவிக்காக போட்டியிடத் தொடங்கியது முதல், டொனல்ட் டிரம்ப் குற்றம்சாடி வருகிறது. இந்நிலையில், பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகும் என்று அவர் ஜூன் முதல் நாள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். (பூங்கோதை)