இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 77 பேர் வெள்ளிக்கிழமை அன்று தமிழகத்தை வந்தடைந்தனர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட இந்த மீனவர்கள், தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. வெள்ளிக்கிழமை காலை இவர்கள், காரைக்கால் துறைமுகத்தை வந்தடைந்து, வீடுகளுக்கு திரும்ப அனுப்பப்பட்டுள்ளனர் என்று அரசு அலுவலர் ஒருவர் கூறினார்.