இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கிராமப்புறச் சாலைகளை ஒன்றிணைக்கும் நிலையை மேம்படுத்தும் வகையில், இந்திய அரசு, குஜராத் அரசு மற்றும் ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கி வெள்ளிக்கிழமை புது தில்லியில் கடன் உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. குஜராத்தின் கிராமப்புறச் சாலைகளின் கட்டுமானத் திட்டத்திற்கு இவ்வங்கி 32கோடி 90 லட்சம் அமெரிக்க டாலர் கடன் வழங்கும் என்று அதிகாரப்பூர்மாக தகவல் தெரிவித்துள்ளது.
இந்த திட்டம், குஜராத் மாநிலத்தில் உள்ள சுமார் 80 லட்சம் மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தும். அதன் மூலம், மாநிலத்தின் 33 மாவட்டங்களிலுள்ள 1,060 கிராமங்களில் சாலைகள் கட்டியமைக்கப்படும்.