பாகிஸ்தானின் புதிய அமைச்சரவையின் உறுப்பினர்கள் ஆகஸ்டு 4ஆம் நாள் வெள்ளிக்கிழமை அரசுத் தலைவர் மாளிகையில் உறுதிமொழி அளித்து பதவியேற்றனர். அரசுத் தலைவர் மம்நூன் ஹுசைன், புதிய தலைமை அமைச்சர் ஷாஹித் காகான் அப்பாஸி, பல்வேறு கட்சிப் பிரிவுகளின் தலைவர்கள், ராணுவ துறைத் தலைவர்கள் ஆகியோர் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
புதிய அமைச்சரவையின் உறுப்பினர்களில் பலர், நவாஸ் ஷெரீப் தலைமையின் போதும் அமைச்சர்களாக இருதுள்ளனர். அதேசமயத்தில், பஞ்சாப் மாநிலத்தின் தென் பகுதிகளைச் சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவில் அதிகரித்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.
தற்போதைய ஆளும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் பிரிவின் செல்வாக்கினை வலுப்படுத்துவதாகவும், அடுத்த ஆண்டில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்குத் தயார் செய்வதாகவும் அது அமையும் என்று கருதப்படுகிறது.