சர்வதேச உறவின் அடிப்படை விதிகளைப் பார்த்தால், சீனாவின் உரிமைப் பிரதேசத்துக்குள் இந்திய படைவீரர்கள் நுழைந்து தங்கக் கூடாது. இந்தியா சீனாவில் ஆயுதங்களை நிறுத்துவதும் சரியில்லை என்று தாய்லாந்தின் சர்வதேச உறவு நிபுணரும் சூலலூங்குங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆசிய ஆய்வகத்தின் தலைவருமான டாக்டர் நுஅல்னுய் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சீன வானொலி நிலையத்தின் செய்தியாளருக்குப் பேட்டியளிக்கையில்,இந்திய படைவீர்ர்கள் எல்லையைக் கடந்து சீனாவுக்குள் நுழைந்த பகுதி பூடானுக்கு அருகில் உள்ளது. பூடான் ஒரு சிறிய நாடு. இந்தியாவின் இச்செயலின் பிற நோக்கம் கவனத்துக்குரியது என்று அவர் தெரிவித்தார்.