• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் துவக்கம்
  2017-08-06 15:23:17  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆசியான் அமைப்பின் 10 உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் ஆகஸ்டு 5ஆம் நாள் காலை பிலிப்பைன்ஸ் நாட்டுத் தலைநகர் மணிலாவில் அதிகாரப்பூர்வமாக துவங்கியது.

அன்று நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு, கொரிய தீபகற்ப நிலைமை குறித்த அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. வடகொரியா, ஐ.நா.வின் தொடர்புடைய தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அமைதியான முறையில் கொரிய தீபகற்ப பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது.

ஆகஸ்டு 6ஆம் நாள் முதல், சீனா-ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம், ஆசியான் மற்றும் சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

2017ஆம் ஆண்டு, ஆசியான் அமைப்பு நிறுவப்பட்டதன் 50ஆவது நிறைவு ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040