• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வட கொரியா மீதான ஐ.நா பாதுகாப்பு அவையின் புதிய தடை நடவடிக்கை
  2017-08-06 16:27:29  cri எழுத்தின் அளவு:  A A A   
வட கொரியா தொடர்பான 2371வது தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்பு அவை ஆகஸ்டு 5ஆம் நாள் ஏற்றுக்கொண்டது. ஜூலை 4 மற்றும் 28ஆம் நாள், வட கொரியா எறிவிசை ஏவுகணையை சோதனை செய்ததற்கு, இத்தீர்மானம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் மீதான புதிய தடை நடவடிக்கைகளும் இதில் அறிவிக்கப்பட்டன.

மேலும், புதிய அணு ஆயுத சோதனையை மேற்கொள்ளவதையும், எறிவிசை ஏவுகணையைப் பரிசோதனை செய்யவதையும் நிறுத்தி, அணு ஆயுதங்களைக் கைவிடுமாறு இத்தீர்மானம் வட கொரியாவைக் கோரியுள்ளது. அத்துடன், வட கொரியாவின் அணு ஆயுதப் பிரச்சினை தொடர்புடைய 6 தரப்புப் பேச்சுவார்த்தை மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்றும் இத்தீர்மானம் தெரிவித்துள்ளது. (பூங்கோதை)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040